ரூமச்சல ஜங்கல் பீச் பகுதியிலிருந்து கடலுக்கு விழுந்த ஜோடியின் சடலங்கள் தேடி கடற்படை தேடல் நடவடிக்கைகள்

காலி, ரூமச்சல ஜங்கல் பீச் பகுதியிலிருந்து கடலுக்கு விழுந்த ஜோடியின் சடலங்கள் தேடி இன்று (ஜூன் 16) கடற்படை தேடல் நடவடிக்கைகள் மேற்கொன்டுள்ளனர்.

காலி, ரூமச்சல பிரதேசத்தில் ஜங்கல் பீச் பகுதியிலிருந்து கடலுக்கு விழுந்த ஒரு ஜோடி பின்னர் காணவில்லை என ஹபராதூவ பொலிஸிடமிருந்து கடற்படைக்கு தகவல் கிடைத்தபின் தெற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்களின் ஒரு நீர் முழ்கி குழு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு கடுமையான முயற்சியின் பின்னர் கடற்படையினர் நீரில் மூழ்கிய பெண்னின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த பெண் 30 வயதானவராக அடயாளம் கானப்பட்டுள்ளதுடன் உடலை பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் ஹபராதூவ பொலிஸார் மேற்கொள்கின்றனர். ஆண் நபரின் சடலம் கண்டுபிடிக்க மேலும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.