‘கஜாபாஹு’ கப்பலின் முதல் பணி - கடற்படையினர் ஒரு நோய்வாய்ப்பட்ட மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வந்தனர்.

இலங்கை கடற்படை இன்று (ஜூன் 17) கடலில் நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தது.

அதன்படி, 2019 ஜூன் 9 ஆம் திகதி பேருவாலயில் உள்ள மீன்வள துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட 'ஷான் புத்தா 4' என்ற மீன்பிடிப்படகில் இருந்த ஒரு மீனவர் நோய்வாய்ப்பட்டதாக மீன்வள மற்றும் நீர்வளத் துறையால் கிடைக்கப்பட்ட தகவலின்படி உடனடியாக இலங்கை கடற்படையின் 'கஜாபாஹு' கப்பல் மீனவரை கரைக்கு கொண்டுவர அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காலி கலங்கரை விளக்கத்திலிருந்து 109 கடல் மைல் தொலைவில் நோயாளி பாதுகாப்பாக கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ வசதிகளுடன் கூடிய இந்த கப்பல், நோயாளிக்கு முதலுதவி அளித்து, பின்னர் துரித தாக்குதல் படகின் மூலம் தரைக்கு அழைத்து வரப்பட்டார்.மேலும் இந்த நோயாளி மருத்துவ சிகிச்சைக்காக கராபிட்டி போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இன்னும் இலங்கை கடற்படையின் ‘கஜாபாஹு’ கப்பல் இலங்கை கடற்படை கப்பல்களுடன் இணைந்த்தன் பின் மேற்கொண்ட முதல் மீட்பு பணி இதுவாகும்.