4017 சங்கு சிப்பிகள் கடத்திய ஒருவர் கடற்படையினரினால் கைது

2019 ஜூன் 18 திகதி தலைமன்னார் பகுதியில் வைத்து சட்டவிரோதமாக சங்கு சிப்பிகள் கடத்தி சென்ற ஒருவரை கடற்படையினர் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக வடமத்திய கடற்படை கட்டளை மூலம் தலைமன்னார் பகுதியில் அமைக்கப்பட்ட சாலைத் தடையில் வைத்து தலைமன்னார் இருந்து பேஸாலை பகுதிக்கு சென்ற சந்தேகத்திற்கிடமான கேப் வண்டியொன்று சோதிக்கபட்டதுடன் அங்கு 1645 சங்கு சிப்பிகளுடன் ஒருவரை கைது செய்யப்பட்டன. குறித்த சந்தேகநபரின் மேலதிக விசாரணையில் போது 2372 சங்கு சிப்பிகள் அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர் குறித்த சந்தேகநபர் மன்னார், பேஸாலை பகுதியில் வசிக்கின்ற 51 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட குறித்த சந்தேகநபர், கேப் வண்டி மற்றும் சட்டவிரோத சங்கு சிப்பிகள் மேலதிக விசாரணைக்காக மன்னார் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.