சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி நான்கு (24) நபர்கள் கடற்படையினரால் கைது

திருகோணமலை மலைமுண்டால கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 நபர்களை கடற்படை வீரர்கள் இன்று (ஜூன் 22) கைது செய்துள்ளனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த நபர்களை கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன் 04 டிங்கி படகுகள், 04 வெளிப்புற மோட்டார்கள் (ஓபிஎம் இயந்திரங்கள்) மற்றும் 04 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படை காவலில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் டிங்கி, ஓபிஎம், அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள், ஆகியவற்றுடன் திருகோணமலை கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் கார்யாலயத்திற்க்கு ஒப்படைக்கப்பட்டனர்.