வெடிமருந்துகளை உபயோகித்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களை கடற்படையினரால் கைது

மன்னார் பகுதியில் 2019 ஜூன் 22 அன்று சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக 4 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொண்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 சந்தேக நபர்களை கைது செய்தனர். சந்தேக நபர்கள் 33, 32, 30 மற்றும் 27 வயதுடைய மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களுடன் ஒரு டிங்கி, ஒரு வெளிப்புற மோட்டார் மற்றும் 358 கிலோ கிராம் சட்டவிரோதமாக பிடிபட்ட மீன்கள் கடற்படையால் இவ்வாறு கைது செய்யப்பட்டன. பின்னர் அவை மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.