கடற்படை மூன்று நபர்களை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளது

இன்று (ஜூன் 24) காலை மன்னாரில் உருமலையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று 3 நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மன்னாரில் உள்ள உருமலை கடற்கரை பகுதியில் தேடுதல் நடத்தியுள்ளனர் மேலும் சந்தேக நபர்கள் 22, 26 மற்றும் 27 வயதுடைய தலை மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக தலை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.