இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 04 பேர் கைது

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் ஒரு படகு 2019 ஜூன் 26 ஆம் திகதி கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டது.

வடக்கு கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் கச்சத்தீவு கடல் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகு இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கு கொன்டுவரப்பட்டன.

கைது செய்யப்பட்ட 04 இந்திய மீனவர்களும் 45, 47, 50 மற்றும் 51 வயதுடையவர்கள்க அடையாலம் கானப்பட்டன. இவர்களை மருத்துவ பரிசோதனையின் பின்னர், யாழ்ப்பாணம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்திய ரோந்துப்பணியின் விளைவாக, இலங்கை பிராந்திய கடல் எல்லை மீறும் இந்திய மீன்பிடி இழுவைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், கடற்படை தனது வளங்களை உள்ளூர் மீனவர்களின் பாதுகாப்பிற்காகவும், தீவின் பிராந்திய நீரில் மீன் இருப்புக்களைப் பாதுகாப்பதற்காகவும் தொடர்ந்து செயல்படுத்தும்.