வெடிபொருளைப் பயண்படுத்தி மீன் பிடிக்க முயன்ற ஐந்து பேர் (05) கடற்படையினரினால் கைது

புல்முடேய், கோகிலாய் தடாகத்தின் ஏரி வாய் பகுதியில் வெடிபொருளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்ற 05 பேரை கடற்படையினரினால் 2019 ஜூன் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், வெடிபொருட்களுடன் மீன்பிடிக்க முயன்ற 5 பேரை இன்று மேற்கொன்டுள்ள ரோந்துப் பணியின் போது கைது செய்தனர். சந்தேக நபர்கள் 27 முதல் 43 வயதுடைய புல்முட் பகுதியில் வசிப்பவர்களாக கண்டரியபட்டனர்.

மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் இரண்டு டிங்கிகள், 02 ஓபிஎம்கள், 01 வாட்டர் ஜெல் சார்ஜர், 01 குழாய் வாட்டர் ஜெல், 05 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் 04 பாதுகாப்பு உருகிகள் ஆகியவையும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்களுடன் குறித்த பொருட்கள் புல்முட் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.