சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 நபர்கள் கடற்படையினரினால் கைது

கடந்த ஜூன் 29 ஆம் திகதி திருகோணமலை பேக் பே மற்றும் உப்பாரு பகுதிகளில் வைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 பேரை கடற்படையினர்கள் கைது செய்தனர்.

கிழக்கு கடற்படை கட்டளையில் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளில் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் காரணத்தினால் இவர்களை கைது செய்தனர்.

அதன் படி மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை செய்யப்பட்ட திருகோணமலை பேக் பே பகுதியில் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் 23-32 வயதுடைய திருகோணமலை, எரக்கண்டி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 01 டிங்கி, 01 வெளிப்புற இயந்திரம், ஒரு அங்கீகரிக்கப்படாத வலை மற்றும் 396 கிலோ சட்டவிரோதமாக பிடிபட்ட மீன்களை கடற்படை காவலில் வைக்கப்பட்டன.

மேலும், உப்பாரு பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகளுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு (07) நபர்களை ஜூன் 29 அன்று கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்படை வீரர்களினால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 23-48 வயதுடைய கின்னியா பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயண்படுத்திய ஒரு டிங்கி, ஒரு வெளிப்புற இயந்திரம் மற்றும் தடைசெய்யப்பட்ட ஒருவலையும் கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள், டிங்கி படகு, வெளிப்புற இயந்திரங்கள், பிடிக்கப்டப்ட மீன்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடலோர காவல்படை மூலம் - திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.