சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள் கடற்படையினரினால் கைது

திருகோணமலை பேக் பே பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 நபர்களை கடற்படை வீரர்கள் 2019 ஜூன் 30 அன்று கைது செய்தனர்.

கிழக்கு கடற்படை கட்டளையில் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், திருகோணமலை பேக் பே பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளில் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் காரணத்தினால் இவர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர்கள் 29-39 வயதுடைய திருகோணமலை, நோவேலி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 01 டிங்கி, 01 வெளிப்புற இயந்திரம் மற்றும் ஒரு அங்கீகரிக்கப்படாத வலை கடற்படை காவலில் வைக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள், டிங்கி படகு, வெளிப்புற இயந்திரம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கை கடலோர காவல்படை மூலம் திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.