கடற்படைப் படைப்பிரிவு ‘மஹவ’ கடற்படை நிலைப்படுத்தல் ‘மஹவ’ எனப் பெயரிடப்பட்டன

கடற்படைப் படைப்பிரிவு ‘மஹவ’ கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் 30 ஜூன் 2019 அன்று கடற்படை நிலைப்படுத்தல் ‘மஹவ’ என அறிவிக்கப்பட்டது.

கடற்படை நிலைப்படுத்தல் ‘மஹவ’ என்று அறிவித்த பின்னர் கடற்படைத் தளபதி வளாகத்திற்குள் ஒரு கண்கானிப்பு விஜயமொன்றை மேறகொன்டுள்ளார். மேலும் இந்த சந்தர்ப்பத்தைக் குறிக்கும் விதமாக ஒரு மரக்கன்றொன்றும் நட்டார். கடற்படை நிலைப்படுத்தல் ‘மஹவ’ கடற்படைப் படைப்பிரிவு ‘மஹவ’ என்று 2008 ஏப்ரல் 5 அன்று நிறுவப்பட்டதுடன் தற்போது அங்கு கடற்படை பயிற்சி மற்றும் ஒரு விவசாய திட்டமும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு கடற்படைப் பணியாளர்களை உரையாற்றிய கடற்படைத் தளபதி, குண்டு அகற்றுவதற்கான பயிற்சி மையமாக இந்த வரிசைப்படுத்தல் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஒரு சேவை நபருக்கு வெடிகுண்டு அகற்றுவது குறித்த அடிப்படை அறிவு தேவை என்றும் குறிப்பிட்டார். மேலும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வெடிபொருட்களை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடற்படைத் தளபதி மேலும் கூறுகையில், வெடிபொருளை அடையாளம் காண்பது தொடர்பான பயிற்சியை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் இந்த பயிற்சி நிறுவனம் கடற்படைக்கும் இலங்கைக்கும் ஒரு சொத்தாக இருக்கும்.

மேலும், இந்த நிகழ்வுக்காக வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா, கட்டளை அதிகாரி கடற்படை நிலைப்படுத்தல் ‘மஹவ’ கொமான்டர் லலித் குமார ஆகியோர் உட்பட வடமேற்கு கடற்படை கட்டளையின் துறைத் தலைவர்கள் மற்றும் மூத்த மற்றும் இளைய அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.