"பசுமை முகாம் - ஒரு கடற்படையினருக்கு ஒரு மரக்கன்று" எனத் திட்டம் வடக்கு கடற்படை கட்டளையில் தொடங்கியது

"பசுமை முகாம் - ஒரு கடற்படையினருக்கு ஒரு மரக்கன்று" எனத் திட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் கருத்தின் படி வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் இன்று (ஜூலை 01,) தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு வட கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர தலைமை தாங்கினார். அதன்படி, அவர் தனது அலுவலக வளாகத்தின் தோட்டத்தில் மரக்கன்றுகளை நட்டுவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார், இது அனைத்து கடற்படை வீரர்களுக்கும் வடக்கு கடற்படை கட்டளைக்குள் கடற்படை வளாகத்திற்குள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை சூழலை மேம்படுத்துவதற்காக நிலையான மரத் தோட்டங்களில் தீவிரமாக ஈடுபட வாய்ப்பளித்தது. சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் வானிலை முறைகளை கருத்தில் கொண்டு வடக்கு பகுதிக்கு சிறந்த வறட்சி தாங்கும் தாவரங்களை அடைவதின் முக்கியத்துவத்தையும் தளபதி வலியுறுத்தினார்.

இன் நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி உட்பட பிரதேசத்தின் துறைத் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் கடற்படைத் தளபதியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், கடற்படையில் பசுமை-நீல கருத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் பரந்த அளவிலான சுற்றுச்சூழல் நட்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.