ரவைகளுடன் மூன்று பேர் கடற்படையினரினால் கைது

கடற்படை வீரர்கள் மற்றும் மன்னார் ஊழல் தடுப்புப் பிரிவின் விரர்கள் இனைந்து 2019 ஜூலை 6 ஆம் திகதி மன்னார், உப்புக்குளம் பகுதியில் நடத்தப்பட்ட சிறப்புத் நடவடிக்கையின் போது ரவைகளுடன் மூன்று (03) பேர் கைது செய்துள்ளனர்.

அதன்படி, ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வடமேற்கு கடற்படை கட்டளை மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது மன்னார் உப்புக்குளம் பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் உள்ள நிலத்தில் புதைக்கப்பட்ட 14 ரவைகள் (7.62 x 39 மிமீ) மீட்டனர். அந்த வீட்டில் குடியிருந்த 71, 62 மற்றும் 29 வயதுடைய மூன்று சந்தேகனபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் மற்றும் ரவைகள் மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக மன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.