செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்த 09 பேர் கடற்படையினரினால் கைது

புத்தலம், களப்பு கடல் பகுதியில் செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்தலில் ஈடுபட்ட 09 பேரை 2019 ஜூலை 10 ஆம் திகதி கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

அதன் படி வட மேற்கு கடற்படை கட்டளையின் படகொன்றின் கடற்படை வீரர்கள் மேற்கொன்டுள்ள ரோந்துப் பணியின் போது, இந்த 09 சந்தேக நபர்களையும் செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் மீன்பிடித்த காரணத்தினால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்கள் கற்பிட்டி பகுதிகளில் வசிக்கின்ற 22 முதல் 58 வயது வரையானவர்களாக அடையாளம் காணப்படுள்ளது. அங்கு சந்தேக நபர்களுடன் 04 டிங்கிகள், 04 வெளிப்புற மோட்டார்கள், மீன்பிடிக்கப்பட்ட மீன் 51 கிலோ கிராம் மற்றும் 04 மீன்பிடி வலைகள் ஆகியவை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள், டிங்கி படகுகள், வெளிப்புற இயந்திரங்கள், வலைகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் மீன்வளத்துறை இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.