ஹெரோயினுடன் இருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் 2019 ஜூலை 10 ஆம் திகதி கல்முனை, ஒலுவில் சந்தியில் வைத்து 5.310 கிராம் ஹெரோயினுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக தென்கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கல்முனை, ஒலுவில் சந்தியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இவர்களை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டது. மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகத்திற்கிடமான 02 நபர்களை சோதிக்கும் போது, 5.310 கிராம் ஹெரோயின் அடங்கிய 05 சிறிய பாக்கெட்டுகளை மோட்டார் சைக்கிளின் இருக்கை அட்டையில் மறைத்து வைத்திருக்கும் போது இவ்வாரு கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் அட்டாலச்சேனை பகுதியில் வசிக்கின்ற 33 மற்றும் 21 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள், ஹெரோயின் மற்றும் மோட்டார் சைக்கிள் கல்முனையில் உள்ள போலீஸ் சிறப்பு பணிக்குழுவிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.