போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற இரண்டு படகுகள் (02) கடற்படையினரினால் கைது

அடையாளம் உறுதிப்படுத்தப்படாத அல்லது பதிவு அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படாத மீன்பிடி படகொன்று காலி ஆழ் கடலில் செல்லும் போது கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

அதன் பின் மீன்பிடி படகில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் என சந்தேகிக்கப்படுகின்ற பொருட்கள் (சுமார் 60 கிலோ) கண்டுபிடிக்கப்பட்டதுடன் இக் கப்பல் மேலதிக விசாரணைகளுக்காக கரைக்குகொண்டு வரப்படுகின்றது. மேலும், இலங்கை கடற்படை மூலம் காலி கடலில் வைத்து 2019 ஜூலை 10 ஆம் திகதி 04 பணியாளர்கள், போதைப்பொருள் என சந்தேகிக்கப்படுகின்ற மாதிரிகளுடன் கைது செய்யப்பட்ட இலங்கை பல நாள் மீன்பிடி படகுவுடன் இக் கப்பல் தொடர்பு இருப்பதாகவும் இலங்கை கடற்படை சந்தேகப்படுகின்றது. மேலும் விசாரணைகள் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ளன.