2393 கிலோ கிராம் பீடியிலை மற்றும் புகையிலை கொண்டு சென்ற மூவர் கடற்படையினரினால் கைது

பீடியிலை மற்றும் புகையிலை சட்டவிரோதமாக கடத்தி வந்த 03 பேரை இன்று (2019 ஜூலை 17) அதிகாலை யாழ்ப்பாணம் மண்டதீவு சந்தியில் வைத்து கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை நிர்வகிக்கும் மண்டதீவு சந்தியில் உள்ள சாலைத் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான லாரி ஒன்று சோதிக்கும் போது அங்கு 44 பொதிகளாக நிரம்பிய 1359 கிலோ பீடி இலைகள் மற்றும் 31 பொதிகளாக நிரம்பிய 1034 கிலோ புகையிலை கைது செய்யப்பட்டன. அவை கய்ட்ஸிலிருந்து யாழ்ப்பாணத்திக்கு லாரி மூலம் கொண்டு செல்லிம் போது இவ்வாரு கைது செய்யப்பட்டன. சந்தேக நபர்கள் 37 மற்றும் 47 வயதுடைய கலேவெல பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், பீடியிலை, புகையிலை மற்றும் லாரி வன்டி மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளன.