இலங்கை கடற்படை கப்பல் ‘விக்கிரம II’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் நிமந்த திஸேரா கடமையேற்பு

இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் ரோந்து கப்பலான ‘விக்கிரம II‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) நிமந்த திஸேரா இன்று (ஜூலை 17) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

அதன் படி, கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் ஹேமந்த ரனசிங்கவினால் காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவன துறைமுகத்தில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் இந்திக குனவர்தன கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.