கடற்படை வீரர் இந்திக திசாநாயக்க இந்த ஆண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்டார்

‘ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் விழா -2019 பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 2019 ஜூலை 17 ஆம் திகதி இடம்பெற்றதுடன் அங்கு கடற்படை வீரர் இந்திக திசாநாயக்க இந்த ஆண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக விருது பெற்றவர்.

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் கருத்துப்படி தொடங்கப்பட்ட ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் விழா விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுப் வீராங்கனிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, பளு தூக்குதலில் காமன்வெல்த் விளையாட்டு 2018 இல் வெள்ளிப் பதக்கம் வென்ற கடற்படையின் கடற்படை வீர்ர் இந்திக திசாநாயக்க மிகச் சிறந்த விளையாட்டு வீரராக விருதை வென்றார். இது தவிர, இந்திக்க விளையாட்டு ஆளுமைக்கான ஜனாதிபதி விருதையும், மிகவும் பிரபலமான விளையாட்டு வீரருக்கான விருதையும் வென்றார், ஜனாதிபதி விளையாட்டு விருது வழங்கும் விழாவில் மூன்று விருதுகளை பெற்றார்.

இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவும் கலந்து கொண்டார், இலங்கை கடற்படை மற்றும் அவரது தாயகத்தை விளையாட்டு நிகழ்வுகளில் அவர் செய்த சாதனைகளுக்காகவும், உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் வென்றதற்காகவும் மதிப்பீடு செய்யப்பட்டது.