வெடி பொருற்கள் பயன்படுத்தி பிடித்த 1355 கிலோ கிராம் மீன் கடற்படையினரினால் கைது

வெடி பொருற்கள் பயன்படுத்தி பிடித்த மீன்களுடன் 05 சந்தேக நபர்களை திருகோணமலை, ரால்குலி பகுதியில் வைத்து 2019 ஜூலை 18 ஆம் திகதி கடற்படையினர் கைது செய்தனர்.

அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களினால் ரால்குலி பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனையின் போது இந்த 05 சந்தேக நபர்களையும் வெடி பொருற்கள் (டைனமைட்) பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 1355 கிலோ மீன்களுடன் கைது செய்யப்பட்டது. . குறித்த மீன்கள் லாரியால் கொண்டு செல்ல தயாராக இருந்த போது இவ்வாரு கைது செய்துள்ளதாக குறிப்பிடத்தக்கது. இச் சந்தேக நபர்கள் 23,27,35,37 மற்றும் 42 வயதுடைய முத்தூரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள், மீன் பொதி மற்றும் லாரி ஆகியவை திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாரான வெடி பொருற்கள் பயண்படுத்தி மீன்பிடிப்பதினால் இலங்கை சுற்றியுள்ள கடலில் சுற்றுச்சூழல் அமைப்பு மிகவும் அழிவுகரமானது, ஏனெனில் வெடிப்பு பெரும்பாலும் மீன்களை ஆதரிக்கும் அடிப்படை வாழ்விடங்களை அழிக்கிறதுடன் இலங்கை கடலில் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவதைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அனைத்து இலங்கையர்களின் கடமையாகும், ஏனெனில் அதன் பன்முகத்தன்மை மற்றும் உற்பத்தித்திறன் எதிர்கால தலைமுறையினருக்கும் முக்கியம்.