அம்பாந்தோட்டை, சமகிபுர உள்ள குளங்களை சுத்தம் செய்ய கடற்படை உதவி

அம்பாந்தோட்டை, சமகிபுர உள்ள குளங்களை சுத்தம் செய்ய 2019 ஜூலை 18 ஆம் திகதி கடற்படை உதவி வழங்கியது. இந்த நிகழ்வை அம்பாந்தோட்டை நகராட்சி மன்றம் ஏற்பாடு செய்தது.

அம்பாந்தோட்டை நகராட்சி எல்லைக்குள் உள்ள பல குளங்கள் பல சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சினைகளால் மாசுபட்டுள்ளது.

அம்பாந்தோட்டை, நகராட்சி ஆணையாளரின் வேண்டுகோளின் பேரில், கடற்படையின் உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவின் (4RU) கடற்படையினர் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர், டிங்கி படகுகள் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்ற சமூக பொறுப்புணர்வு நிகழ்வுகளை மேற்கொள்ளும் அரசு, தனியார் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு இலங்கை கடற்படை தனது முழு உதவியை வழங்குகிறது.