ஹெராயினுடன் ஒருவரை கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் போலீஸ் சிறப்பு அதிரடிப்படை இணைந்து 5 கிராம் மற்றும் 820 மி.கி ஹெராயின் வைத்திருந்த ஒருவரை 2019 ஜூலை 21 அன்று காலி, கதலுவ பகுதியில் வைத்து கைது செய்தது.

அதன்படி, ஹியாரே போலீஸ் சிறப்பு அதிரடிப்படையினருடன் ஒருங்கிணைந்து தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் காலி, கதலுவ பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த நபரை கைது செய்தனர். மேலதிக விசாரணையின் போது குறித்த சந்தேக நபர் அப்பகுதியில் போதைப்பொருள் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஹெராயின் விற்கத் தயாரானபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 28 வயதான அஹங்கம பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் அவர் ஹெராயினுடன் அஹங்கம போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில், இலங்கை கடற்படை தீவிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பதற்கான தேசிய முயற்சியின் பங்களிப்பாக சோதனைகளை கடுமையாக்கியுள்ளது.