மேலும் ஒரு கடற்படை நடவடிக்கையின் போது பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படை வீரர்களினால், 2019 ஜூலை 21, ஆம் திகதி மன்னார் தல்பாடு கடற்கரையில் நடத்தப்பட்ட தேடலின் போது, 05 சந்தேக நபர்களை பீடி இலைகளுடன் கைது செய்துள்ளனர்.

அதன் படி, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களினால் தல்பாடு கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1006.9 கிலோ பீடி இலைகளைக் கொண்ட 32 பொதிகளுடன் 05 பேரை கைது செய்தனர். சந்தேக நபர்கள் 27,34,36,39 மற்றும் 41 வயதுடைய பெசாலே மற்றும் இருக்கலம்பிட்டி பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் பீடி இலை பொதிகளை கடல் வழியாக நாட்டிற்கு கடத்த முயன்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 05 சந்தேக நபர்களும் பீடி இலைகளுடன் யாழ்ப்பாண சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதுடன் இந்த ஆண்டில் 24,000 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன.