சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரை இன்று (ஜூலை 23) ஆம் திகதி திருகோணமலை கல்லடிசேனை பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களினால் கல்லடிசேனை பகுதியில் மேற்கொன்டுள்ள தேடலின் போது, இந்த 22 சந்தேக நபர்களையும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்தனர். சந்தேக நபர்களுடன் 05 டிங்கி படகுகள், 05 வெளிப்புற மோட்டார்கள் (ஓபிஎம்), 04 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் 20 முதல் 44 வயது வரையிலான கின்னியா, ஈச்சலம்பத்து மற்றும் முத்தூர் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். டிங்கி படகுகள், ஓபிஎம், அங்கீகரிக்கப்படாத வலைகள் மற்றும் பிற மீன்பிடி சாதனங்களுடன் 22 சந்தேக நபர்களும் திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவ்வாரான தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துவதன் மூலம், கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தின் மீன்வள மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.