இலங்கை-பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையில் மூன்றாவது நிபுணர் நிலை பணியாளர்கள் பேச்சுவார்தை கொழும்பில்

இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையிலான 3 வது நிபுணர் நிலை பணியாளர்கள் பேச்சுவார்த்தை ஜூலை 23 மற்றும் 24 திகதிகளில் கொழும்பு கலங்கரை விளக்கம் உணவகத்தில் வளாகத்தில் நடைபெற்றது.

முதல் நாளின் நடவடிக்கைகளைத் தொடங்கி, பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள், ரியர் அட்மிரல் நிராஜ ஆட்டிகல பாகிஸ்தான் கடற்படை தூதுக்குழுவை வரவேற்றார். இரண்டு நாள் உரையாடலின் போது, 13 அதிகாரிகள் அடங்கிய இலங்கை தூதுக்குழுவில் கடற்படை இயக்க இயக்குநர் கொமடோர் சஞ்சீவ டயஸ் தலைமை தாங்கினார். இதற்கிடையில், பாகிஸ்தான் கடற்படை தூதுக்குழுவிற்கு கடற்படை பணியாளர்கள் செயல்பாட்டுத் திட்டங்களின் உதவித் தலைவர் கொமடோர் கைபர் ஜமான் தலைமை தாங்கினார்.

இரு நாடுகளில் இடையில் 3 வது தடவையாக இடம்பெற்ற இப் பேச்சுவார்தை மூலம் பரஸ்பர உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை குறிக்க இரண்டு தூதுக்குழு தலைவர்களிடையே நினைவுப் பரிமாற்றங்களும் பரிமாறப்பட்டன.