நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் திறந்து வைப்பு

புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் அமைந்துள்ள கொழும்பு, ஹுனூபிட்டிய கங்காராகாம விஹாரயத்துக்கு சொந்தமான கங்கராம ஓய்வு இல்லத்தில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல் அவர்களால் 2019 ஜூலை 24 அன்று மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராமாதிபதி கலாநிதி கலபோட சிரி ஞானிசர தேரரின் வேண்டுகோளின் பேரில் நிர்மானிக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் அமெரிக்கா அலபாமாவின் பரமின்ஹேம் ரோட்டரி கிளப்பின் நிதி உதவியுடன் இலங்கை கடற்படையினரினால் நிர்மானிக்கப்பட்டது. அதன் படி கடற்படை உதவியுடன் கதிர்காமம் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட 9 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் இதுவாகும். இது மூலம் இப் பகுதிக்கு வருகின்ற பக்தர்களுக்கு மற்றும் மக்களுக்கு சுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் நிருவப்பட்டன.