பாகிஸ்தான் கடற்படை பிரதிநிதி குழுவினர் தெற்கு கடற்படை கட்டளையின் விஜயம்

இலங்கை-பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற மூன்றாவது நிபுணர் நிலை பணியாளர்களின் பேச்சுவார்தைகாக இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் கடற்படை பிரதிநிதி குழுவினர் 2019 ஜூலை 24 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

அதன்படி, பாகிஸ்தான் கடற்படை செயல்பாட்டுத் திட்டப் பிரிவின் உதவித் தளபதி மற்றும் பாகிஸ்தான் தூதுக்குழுவின் பொறுப்பாளரான கொமடோர் கைபர் சமான் உட்பட குழுவினரை அண்புடன் வரவேற்கப்பட்டது. அங்கு தூதுக்குழு தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி கொமடோர் அருண தனபாலாவை சந்தித்தனர். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது, பின்னர் தூதுக்குழு காலி கோட்டை மற்றும் கடல்சார் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.