வடக்கு கடற்படை கட்டளை கடற்கரை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை நடத்தியது

வடக்கு கடற்படைப் கட்டளை தளபதி ரியர் அட்மிரல் கபி சமரவீரவின் உத்தரவின் பேரில், மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் வேலைத்திட்டமொன்று இன்று (28 ஜூலை ) வடக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையில் உள்ள பருத்தித்துறை கடற்படையுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர் பருத்தித்துறை உள்ள கடற்கரை பகுதியை சுத்தம் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். கடற்படையின் முயற்சியின் விளைவாக பல காரணங்களால் மாசுபட்ட கடற்கரை மீண்டும் சுத்தமாகவும் நேர்த்தியான நிலைக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையில், கடற்படை வீரர்கள் ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும் பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்களை நடத்துகின்றனர், குறிப்பாக கடற்படை தீவைச் சுற்றி ஒரு சுத்தமான கடலோரப் பகுதியைப் பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.