மட்டக்களப்பு களப்பு பகுதியில் கடற்படையினர் 09 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை மீட்டுள்ளனர்

இன்று (ஜூலை 28) மட்டக்களப்பு களப்பு பகுதியில் 09 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை (ஒவ்வொன்றும் சுமார் 150 அடி நீளம்) கடற்படை மீட்டுள்ளது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள், இன்று மட்டக்களப்பு மந்தை பகுதியில் நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது, இந்த 09 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மட்டக்களப்பில் உள்ள மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.