இலங்கை கடல் எல்லையில் ஏழு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்

ஏழு இந்திய மீனவர்களும் அவர்களது டோலர் படகும் இன்று (ஜூலை 28) இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது.

வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்டய வேக தாக்குதல் படகின் மூலம் தலைமன்னார் கடற்கரையில் ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடல் பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதன்படி, இந்திய மீனவர்களும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட டோலர் படகும் இலங்கை கடற்படையின் வேக தாக்குதல் படகின் மூலம் வடமத்திய கடற்படை கட்டளைக்குபட்ட இலங்கை கடற்படை கப்பல் ‘தம்மென்னா’ நிறுவனத்திற்க்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடற்படை காவலில் எடுக்கப்பட்ட இந்த மீனவர்கள் 18, 22, 26, 30 மற்றும் 36 வயதுடையவர்களாவதுடன் அந்த மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், ஜூலை 24 அன்று சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களும் அவர்களது டோலர் படகுகளும் வீரரும் இலங்கை கடற்படையின் காவலுக்கு எடுக்கப்பட்டது. மேலும், இந்த நாட்டின் மீனவர்களைப் பாதுகாக்க இலங்கை மீனவர் சமூகத்தின் வளங்களை கடற்படை தொடர்ந்து திறமையாக பயன்படுத்துகின்றது.