ஹம்பாந்தோட்டா துறைமுக வளாகத்தில் மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து (05) நபர்கள் கைது

ஜூலை 28 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது துறைமுக வளாகத்தில் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்த 05 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களுடன் 01 டயர் குழாய் மற்றும் 01 நைலான் வலையும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் 18 முதல் 31 வயது வரையிலான ஹம்பாந்தோட்டை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் ஹம்பாந்தோட்டை துறைமு பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.