இலங்கைக்கு உரித்தான வட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை இன்று (31 ஜூலை) இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி டோலரையும் கைது செய்தது.

கோவிலம் கலங்கரை விளக்கத்திற்கு வெளியே கடல் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் நடவடிக்கையின் போது, சட்ட வீரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்த இந்திய மீனவர்கள் இலங்கை பிராந்திய கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் டோலரும் இலங்கை கடலோர காவல்படைக்கு ஒப்படைக்கப்பட்டது, பின்னர் சந்தேக நபர்கள் கடற்படை தளமான இலங்கை கடல்படை கப்பல் ‘எலாரா’ க்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த மீனவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, யாழ்ப்பாணத்தில் உள்ள உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்திய ரோந்துகளின் விளைவாக, இலங்கை கடலில் சட்டவிரோத நடவடிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் எல்லா நேரங்களிலும் கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்.