சர் ஜான் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தில் புதிய ஆடிட்டோரியம் கடற்படைத் தளபதியால் திறக்கப்பட்டது

சர் ஜான் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தெற்கு வளாகத்தில் உள்ள புதிய ஆடிட்டோரியம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களால் 2019 ஆகஸ்ட் 04 அன்று திறக்கப்பட்டது.

இன் நிகழ்வுக்காக சர் ஜான் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்,எயர் வைஸ் மார்ஷல் சாகர கோடகதெனிய மற்றும் கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தின் தளபதி பிரிகேடியர் அதீப திலகரத்ன, முப்படைப் பணியாளர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த நிகழ்வின் நினைவாக, ஆடிட்டோரியம் வளாகத்தில், கடற்படைத் தளபதியால் ஒரு மரக்கன்று நடப்பட்டது, மேலும் அவர் ஆடிட்டோரியத்தின் கட்டுமானப் பணிகளில் சேர்ந்த மாலுமிகளுடன் உரையாடினார்.

கடற்படை சிவில் இன்ஜினியரிங் கிளையின் தொழில்நுட்பம், திறன்கள் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த புதிய ஆடிட்டோரியம், அனைத்து புதிய உபகரணங்களுடனும் ஒரு நேரத்தில் பெரிய பார்வையாளர்களுக்கு அமர வசதியை வழங்குகிறது.