உள்ளூர் துப்பாக்கியுடன் ஒரு சந்தேக நபர் கைது

இன்று (ஆகஸ்ட் 6) ஹம்பாந்தோட்டை பந்தகிரிய பகுதியில் போலீஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள் உடன் ஒருங்கிணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, பன்வேவ போலீஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, தெற்கு ஹம்பந்தோட்டை முகாமில் கடற்படையினர் நடத்திய சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்தார். குறித்த நபரை சோதிக்கும் போது, உரிமம் இல்லாத இந்த உள்ளூர் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த சந்தேக நபர் 52 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என கண்டரியப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, சந்தேக நபர் உள்ளூர் துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் ஹம்பாந்தோட்ட போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.