சட்டவிரோத 500 சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேக நபர் கைது

ஆகஸ்ட் 06 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பகுதியில் போலீஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகளுடன் இணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது சட்டவிரோத 500 சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, தெக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான 'ஹம்பாந்தோட்டை' கடற்படை முகாமின் கடற்படையினர் மற்றும் பன்வெவ போலீஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 25 பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 500 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் ஹம்பாந்தோட்டை சிப்பிகுலம பகுதியில் வசிக்கின்ற 20 வயதானவராக கண்டரியப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, சந்தேக நபர் மற்றும் சிகரெட்டுகள் ஹம்பாந்தோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில், இலங்கை கடற்படை இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக அனைத்து கடற்படை கட்டளைகளிலும் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்கிறது, மேலும் இவ்வாரான நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பிடிபட்டுள்ளனர்.