388 சங்குகள் கடற்படையினரினால் கண்டுபிடிப்பு

கடற்படையினரினால் 2019 ஆகஸ்ட் 08 ஆம் திகதி புதுமாதலன் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 388 சங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் படி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது புதுமாதலன் பகுதியில் ஒரு மீன்வள முற்றத்தின் அருகே மணல் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த சங்குகளை கண்டுபிடிக்கப்பட்டன. கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சங்குகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைதீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், மீன்வள மற்றும் நீர்வளச் சட்டம் படி 70 மி.மீ க்கும் குறைவான விட்டம் கொண்ட சங்குகளை வைத்திருத்தல், வாங்குவது, விற்பனைக்காக காட்சிப்படுத்துதல், விற்பனை செய்தல், போக்குவரத்து அல்லது ஏற்றுமதி செய்வதை தடை செய்யப்பட்டுள்ளது.