கடலில் மூழ்கிய நபர்களின் ஒரு சடலம் கடற்படையினரினால் மீட்பு

களனி நதி கடலில் விழுகின்ற இடத்தில் மூழ்கி இறந்த ஒருவரின் சடலம் இன்று (ஆகஸ்ட் 10) கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.

2019 ஆகஸ்ட் 9, அன்று மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் அவர்களது படகு கெலனி ஆற்றில் கவிழ்ந்த காரணத்தினால் காணாமல் போயினர். இது தொடர்பாக வத்தலை காவல்துறையிரினால் கடற்படைக்கு அறிவித்த பின் மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட ஒரு நீர் முழ்கி குழுவை அனுப்பிவைக்கப்பட்டன.

அதன்படி, ஒருவரின் உடலைக் கண்டுபிடித்து உடலை தரையில் கொண்டு வர கடற்படைக்கு முடிந்தது. பலியானவர் வத்தலை பல்லியவத்த பகுதியில் வசிக்கின்ற 53 வயதுடையவர் என கண்டரியப்பட்டுள்ளதுடன் மேலும் விசாரணைகளுக்காக சடலம் வத்தலை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.