கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை பொலிஸ் அதிரடி படையினருடன் ஒருங்கிணைந்து கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை 2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி தலமண்ணார் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் தலைமன்னார் பொலிஸ் அதிரடி படையினர் ஆகியோரால் நிர்வகிக்கப்பட்ட தலைமண்ணர் சாலைத் தொகுதியில் சந்தேகத்திற்கிடமான இரண்டு நபர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை மேலும் சோதிக்கும் போது, 230 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது, அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் 42 மற்றும் 46 வயதுடைய ஊருமலை மற்றும் தலைமன்னர் பகுதிகளில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.