39.32 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கடற்படை போலீசாருடன் ஒருங்கிணைந்து யாழ்ப்பாணம் பண்டதிரிப்பு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, இள்ளவாலை காவல்துறையினரின் ஒருங்கிணைப்பில் வடக்கு கடற்படை கட்டளை, இள்ளவாலை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39.32 கிலோ கேரள கஞ்சாவை மீட்டுள்ளது, மேலும் அங்கு இருந்த சந்தேகத்திற்கிடமான நபரும் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் 27 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என கண்டரியப்பட்டது. கேரள கஞ்சா மற்றும் நபர் குறித்து மேலதிக சட்ட நடவடிக்கைகள் இள்ளவாலை காவல்துறையினரால் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், இந்த கடற்படை கட்டளை இன்று கீரமலே பகுதியில் 83.9 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 3 பேரை கைது செய்தது. அடிக்கடி கடற்படை சோதனைகள் நடத்தியதில் இருந்து போதைப்பொருள் கடத்தல் குறைந்தபட்ச நிலைக்கு வந்துள்ளது.