இரண்டு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து 2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கேரள கஞ்சாவுடன் இரண்டு பேரை மாத்தரை நுப்பே பகுதியில் வைத்து கைது செய்தது.

அதன் படி, தெற்கு கடற்படை கட்டளை மற்றும் கோக்மாதூவ போலீஸ் சிறப்பு பணிக்குழு, நுப்பே சந்தி ரயில்வே பாதை ஆருகில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 540 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டது.

குறித்த சந்தேகநபர்கள் கேரள கஞ்சாவை விற்கத் தயாராகி கொண்டிருந்தபோது இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் 26 மற்றும் 27 வயதுடைய மாதரை நுப்பே பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக மாதரை போலீஸ் நிருவனத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சில நாட்களாக கடற்படை மேற்கொன்டுள்ள நடவடிக்கைகளின் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் தடுக்க முடிந்தது, மேலும் நாட்டிலிருந்து போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.