சுகயீனமுற்றிருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு

மீன் பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் கடுமையாக சுக்கையீனமுற்ற மீனவர் ஒருவர் கடற்படையினரினால் சிகிச்சைக்காக இன்று (ஆகஸ்ட் 15) கரைக்கு கொண்டுவரப்பட்டார்

அதன்படி, 2019 ஆகஸ்ட் 06 ஆம் திகதி பேருவலை மீன்வள துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட 'கீதான்ஜலி 1' என்ற பல நாள் மீன்பிடிப்படகில் இருந்த ஒரு மீனவர் நோய்வாய்ப்பட்டதாக மீன்வள மற்றும் நீர்வளத் துறையால் கிடைக்கப்பட்ட தகவலின்படி உடனடியாக இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் படகொன்று மீனவரை கரைக்கு கொண்டுவர அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காலி கலங்கரை விளக்கத்திலிருந்து 10 கடல் மைல் தொலைவில் நோயாளி பாதுகாப்பாக மீட்ட பின். நோயாளிக்கு முதலுதவி அளித்து, பின்னர் துரித தாக்குதல் படகின் மூலம் தரைக்கு அழைத்து வரப்பட்டார். மேலும் இந்த நோயாளி மருத்துவ சிகிச்சைக்காக கராபிட்டி போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.