கடற்படையினரால் சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு நபர்கள் கைது

152 லிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 02 சந்தேக நபர்களை புல்முடே கொக்கிலாய் பகுதியில் 2019 ஆகஸ்ட் 16 ஆம் திகதி கடற்படை கைது செய்ததுள்ளது.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம் கொக்கிலாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது, 152 லிட்டர் சட்டவிரோத மதுபானத்துடன், சட்டவிரோத மதுபானத்தை தயாரிப்பதில் ஈடுபட்டு கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 07 பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் புத்தளம் சின்னப்பாடு பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மற்றும் உடமைகள் கொக்கிலாய் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.