700.3 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படை நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்டன

கடற்படை 2019 ஆகஸ்ட் 17, அன்று புங்குடித்தீவு மற்றும் வடக்கு கடல்களில் மேற்கொன்டுள்ள தேடல் நடவடிக்கைகளின் போது பல பீடி இலைகளை மீட்டது.

வடக்கு கடற்படை கட்டளை மூலம் புங்குடுத்தீவு கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான கரைக்கு வந்துள்ள ஒரு பார்சலைக் கண்கானிக்கப்பட்டதுடன் அதை சோதிக்கும் போது அதுக்குழ் இருந்து 84 கிலோ கிராம் பீடி இலைகளை கண்டெடுக்கப்பட்டன.

மேலும், அதே கட்டளை மூலம் நெடுன்தீவின் வடமேற்கு கடல்களில் நடத்தப்பட்ட ரோந்துப் பணியின் போது, கடலில் மிதக்கின்ற மேலும் 616.3 கிலோ எடையுள்ள பீடி இலைகள் மீட்கப்பட்டன. பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டபோது 08 பொதிகளாக இருந்தன.

அதன் படி, ஆகஸ்ட் 17 ஆம் திகதி இரண்டு தனித்தனி இடங்களில் நடத்தப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது, மொத்தம் 700.3 கிலோ பீடி இலைகளை வடக்கு கடற்படை கட்டளை கண்டுபிடித்தது. பீடி இலைகள் பொதி யாழ்ப்பாண சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

கடற்படையின் தொடர்ச்சியான ரோந்துகளின் விளைவாக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கடற்படையின் பிடியில் பதுங்குவது கடினம். மேலும், தீவின் பிராந்திய நீரில் இந்த வகையான சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து கடற்படை விழிப்புடன் உள்ளது.