கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி இரண்டு (22) நபர்கள் கைது

திருகோணமலை கல்லடிச்சேனி பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரை கடற்படையினர் இன்று (ஆகஸ்ட் 19) கைது செய்ததுள்ளனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம் திருகோணமலை சாம்பூர் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப்பணியின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர். நான்கு டிங்கி படகுகள், இரண்டு தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய பிற மீன்பிடி உபகரணங்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டன. சந்தேக நபர்கள், டிங்கிகள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் மீன்வளத்துறை திருகோணமலை இயக்குநரிடம் மேல்படி சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட உள்ளன.

அங்கீகரிக்கப்படாத வலைகளுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட முயன்ற நபர்கள், கடந்த சில வாரங்களாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள், எதிர்கால தலைமுறையினருக்கு மீன் மற்றும் பிற கடல் வளங்களை பாதுகாக்க இதுபோன்ற சட்டவிரோத செயல்களைக் குறைக்க கடற்படை முன்னோடியாக செயல்பட்டு வருகின்றது.