ஹெராயினுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 21) காலை தலைமன்னார், பியர்கம பகுதியில் 210 கிராம் ஹெராயின் கொண்ட இரண்டு நபர்களை கைது செய்தது.

அதன் படி, தலைமன்னார், பியர்கம கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஹெராயின் வைத்திருந்த இரண்டு நபர்கள் மற்றும் டிங்கி படகொன்று வட மத்திய கடற்படை கட்டளை மூலம் கைது செய்யப்பட்டுள்ளது.

கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நீர் கொழும்பு மற்றும் தலைமன்னார் பகுதிகளில் வசிக்கின்ற 31 மற்றும் 42 வயதுடைய தமிழ் மற்றும் சிங்களவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.