தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 15 பேர் கடற்படையினரினால் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினைந்து (15) நபர்கள் 2019 ஆகஸ்ட் 22, அன்று திருகோணமலை வலல்தொட்டம் பகுதியில் வைத்து கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த சந்தேக நபர்கள் திருகோணமலை வலல்தொட்டம் பகுதியில் நடத்தப்பட்ட ரோந்துப் போரின்போது கிழக்கு கடற்படைத் கட்டளை மூலம் கைது செய்யப்பட்டனர். அங்கு அவர்களிடமிருந்து 03 டிங்கி படகுகள், 03 தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சில மீன்பிடிபொருட்கள் கடற்படையினரினால் கைப்பற்றியது. டிங்கி படகுகள், வலைகள் மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் திருகோணமலை உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

அங்கீகரிக்கப்படாத வலைகளுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட முயன்ற நபர்கள், கடந்த சில நாட்களில் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டனர். மேலும் எதிர்கால தலைமுறையினருக்கு மீன் மற்றும் பிற கடல் வளங்களை பாதுகாக்க இதுபோன்ற சட்டவிரோத செயல்களைக் குறைக்க கடற்படை பல நடவடிக்கைகள் மேற்கொள்கின்றது.