கடற்படை 574.5 கிலோ கிராம் பீடி இலைகளை மீட்டுள்ளது

2019 ஆகஸ்ட் 23 ஆம் திகதி மன்னார் மற்றும் தலைமன்னார் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துகளின் போது 574.5 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையால் மீட்கப்பட்டன.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை நடுகுடா, சவுத் பார், ஒலுதோடை மற்றும் மன்னாரில் உள்ள ஓல்ட் பியர் மற்றும் தலைமன்னார் கடற்கரை பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது 574.5 கிலோ கிராம் பீடி இலைகள் 10 பொட்டலங்களாக கரை ஒதுங்கியுள்ளன. மீட்கப்பட்ட பீடி இலைகள் யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

தொடர்ச்சியான கடற்படை ரோந்துகள் காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அழுத்தத்திற்கு உள்ளாகி, சட்டவிரோதமாக மாற்றப்படும் போதைப்பொருட்களை கைவிட முனைகிறார்கள், மற்றும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தவிர்க்க கடற்படை எச்சரிக்கையாக உள்ளது.