2264.9 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை கண்டுபிடித்ததுள்ளது

ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் மன்னார் மற்றும் தலைமன்னார் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கடற்படை பீடி இலைகளை மீட்டது.

வட மத்திய கடற்படை கட்டளை 2264.9 கிலோகிராம் பீடி இலைகளை 27 பார்சல்களில் மன்னார் மற்றும் தலைமன்னார் பகுதிகளில் உள்ள நாடுகுடா, வன்காலை மற்றும் ஓல்ட் பியர் கடற்கரைகளில் கண்டெடுத்துள்ளது.பீடி இலை தொகை மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணத்தின் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கடற்படை நடத்திய தேடலில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 2839.4 கிலோ கிராம் பீடி இலைகள் இந்த பகுதிகளில் இருந்து மீட்க்கப்பட்டன.