சேதமடைந்த டிங்கி படகில் காணப்பட்ட பீடி இலைகள் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளது

தலமன்னார் லைட்ஹவுஸின் வடமேற்கே உள்ள கடற்கரையில் 2019 ஆகஸ்ட் 24 ஆம் திகதி கடல்லைகளினால் சேதமடைந்த டிங்கி படகில் இருந்து 120 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படை மீட்டுள்ளது.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் ரோந்து நடவடிக்கையின் போது கடலில் மிதக்கும் டிங்கியில் 120 கிலோகிராம் பீடி இலைகளைக் கொண்ட இரண்டு பார்சல்கள் கிடைத்தன.

மேலும், இரண்டு மீனவர்களில் ஒருவரை கடற்படை மீட்டுள்ளது. பீடி இலைகள் மற்றும் டிங்கி ஆகியவற்றின் சரக்கு மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.