கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு பயிற்சி திட்டமொன்று யாழ்ப்பாணம் வடமாரச்சி பகுதியில் நடத்தப்பட்டது

அதி மேதகு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் “நாட்டுக்காக ஒன்றாக நிற்போம்” கருத்துப் படி வடமாரச்சி பிரதேச செயலகத்தில் ஆசிரியர்களுக்கான போதைப்பொருள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு திட்டம் போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி பணிக்குழு மற்றும் கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் 2019 ஆகஸ்ட் 26, அன்று வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் கருத்துப்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் வழிகாட்டுதலின் கீழ், இந்த போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டம் போதைப்பொருட்களிலிருந்து விடுபட்ட நாட்டை ஒரு இயக்கமாக உருவாக்க வேண்டும் என்ற உன்னத பார்வையுடன் நடத்தப்படுகிறது, இந்த நிகழ்ச்சி யாழ்ப்பாண பிரதேச செயலகங்களை உள்ளடக்கி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் இத் திட்டம் குறித்த பயிற்ச்சி திட்டங்களில் மூன்றாவது திட்டமாகும். மேலும் வடமாரச்சி பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட போதைப்பொருட்களைத் தடுக்கும் விழிப்புணர்வு திட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.